பள்ளியில் தேசிய அறிவியல் தின பேச்சு, கட்டுரை, ஓவியப்போட்டிகள்
முதுகுளத்தூர் ஸ்ரீ கண்ணா மெட்ரிக் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு ஓவியப்போட்டி, பேச்சுபோட்டி,கட்டுரை போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன.
6 முதல் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவ,மாணவிகள் பங்கேற்ற போட்டிகளை
முன்னாள் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கூ.லெட்சுமணன் தொடக்கி வைத்தார். இதில் ஓவியப்போட்டியில் ஆறாம் வகுப்பு மாணவி எம்.விஷாலினி முதல் பரிசும், கட்டுரைப்போட்டியில் ஏழாம் வகுப்பு மாணவி கேமலெட்சுமி முதல் பரிசும், பேச்சுப் போட்டியில் ஒன்பதாம் வகுப்பு மாணவர் சஞ்சய்கரன் முதல்பரிசும் பெற்றனர்.போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பள்ளியின் நிறுவனர் கே.காந்திராஜன் பரிசு, சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில் கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் ஆர்.ராமநாதன்,தேசிய அறிவியல் தின ஒருங்கிணைப்பாளர் டி.நவநீதகிருஷ்ணன்,தேசிய அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் இ.பாலகிருஷ்ணன்
உள்ளிட்டோர் பங்கேற்றனர். பள்ளியின் தாளாளர் எஸ்.சந்திரசேகரன் நன்றி தெரிவித்தார்.