முதுகுளத்தூர் வர்த்தக சங்க பொதுக்குழு கூட்டம்
முதுகுளத்தூரில் நகர் வர்த்தக சங்க பொதுக்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு சங்கத் தலைவர் வி.கருப்பசாமி தலைமை வகித்தார். செயலாளர் எம்.செய்யது அபுதாஹிர்,பொருளாளர் எஸ்.முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், முதுகுளத்தூர் பகுதியில் வீடு மற்றும் தொழில் நிறுவனங்களில் மின் அழுத்தம் உயர்ந்தும், தாழ்ந்தும் வருவதால் மின் உபகரணங்கள் பழுதடைந்து விடுவதால், மின்துறை அதிகாரிகள் சீர் செய்ய வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சங்க துணைத்தலைவர் ராமபாண்டியன், கௌரவத் தலைவர் கே.எம் காதர் மைதீன், இணை இயக்குநர் குமரையா, செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.