முதுகுளத்தூரில் ஓய்வு பெற்ற அதிகாரிக்கு வெட்டு: மகன் ஆத்திரம்
முதுகுளத்தூர், மே 16–
முதுகுளத்தூர் ஆத்திகுளம் பகுதியை சேர்ந்தவர் வீரபத்ரன் (வயது59) ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அதிகாரி. இவரது மகன் சரவணகுமார்.
இவர், வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததை வீரபத்ரன் கண்டித்துள்ளார். இது சரவணகுமாருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. நேற்று வீட்டில் வீரபத்ரன் தனியாக இருந்தபோது அங்கு வந்த மகன், அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதில் காயம் அடைந்த வீரபத்ரன் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதே ஊரை சேர்ந்த சசி, ராஜா ஆகியோரது தூண்டுதலின் பேரில்தான் சரவணக்குமார் அரிவாளால் வெட்டியதாக போலீசில் புகாரும் செய்யப்பட்டது.
இதுகுறித்து முதுகுளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மூக்கன், சப்–இன்ஸ்பெக்டர் ஜான்சிராணி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து சரவணக்குமார் உள்பட 3 பேரை தேடி வருகின்றனர்.