முதுகுளத்தூரில் மழை : தெருக்களில் துர்நாற்றம்
முதுகுளத்தூர்,:
முதுகுளத்தூரில் பெய்த பலத்தமழையால் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் வெளியேற முடியாமல், வீடுகளுக்குள் புகுந்தது.முதுகுளத்தூரில் நேற்று 1 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. பஸ் ஸ்டாண்ட், ஆசாரி தெரு,வண்ணார் தெரு, கீழரத வீதிகளில் மழைநீர் வெளியேற வாறுகால் வசதிகள் இல்லை.
இதனால், தாழ்வாக உள்ள கான்கிரீட் தளம் போடப்பட்ட தெருக்களில் தேங்கி நின்றன. ஏற்கனவேபெய்த மழையால் தெருக்களில் பல நாட்களாக தேங்கிகிடந்த மழைநீர் கழிவுநீராக மாறி, துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தியாவதால், பொதுமக்கள் இரவில் தூங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.