எய்ட்ஸ் விழிப்புணர்வு நாடகம் கீழத்தூவல் அரசு பள்ளிக்கு மாநில அளவில் 3ம் இடம்
முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் அருகேயுள்ள கீழத்தூவல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் எய்ட்ஸ் விழிப்புணர்வு நாடகத்தில் மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
கீழத்தூவல் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் திருநாகேஸ்வரன், பவித்ரா, சபரிபுவனேஸ்வரி, வளர்மதி, காளீஸ்வரி ஆகிய மாணவ, மாணவிகள் மாவட்ட அளவில் நடைபெற்ற எய்ட்ஸ் விழிப்புணர்வு நாடக போட்டியில் கலந்துகொண்டு முதல் இடம் பெற்றனர். இவர்கள் மாநில அளவில் சேலம் மாவட்ட கிரீன் டெக் கல்லூரில் நடைபெற்ற நாடக போட்டியில் கலந்து கொண்டனர்.
இதில் கீழத்தூவல் பள்ளி மாணவ, மாணவிகள் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். இவர்களையும், பயிற்சி அளித்த தமிழ் ஆசிரியர் சக்தி ஆகியோரையும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்கண்ணு, மாவட்ட கல்வி அலுவலர் பழனியாண்டி, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனர் லெட்சுமணன், பள்ளி தலைமை ஆசிரியர் ராஜபூபதி ஆகியோர் பாராட்டினர்.