ஸ்ரீவடக்கு வாசல் செல்லி அம்மன் கோயில் பூக்குழி உற்சவ விழா
முதுகுளத்தூர் ஸ்ரீ வடக்கு வாசல் செல்லி அம்மன் கோயில் 39 ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை பக்தர்கள் அலகு வேல் குத்தி பூக்குழியில் இறங்கும் வைபவம் நடைபெற்றது.
முதுகுளத்தூர், எம்.தூரி, செல்வநாயகபுரம் ஆகிய கிராமங்களின் காவல் தெய்வமான ஸ்ரீ வடக்கு வாசல் செல்லி அம்மன் கோயில் 39 ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு, அம்மனுக்கு அலகு வேல் குத்தி பூக்குழியில் இறங்கி பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துவதற்காக, முதுகுளத்தூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமானோர் பால்குடம், அக்னிச் சட்டி, அலகு வேல் குத்தி வந்திருந்தனர். பின்னர், அன்னதானம் நடைபெற்றது.