விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை
முதுகுளத்தூர் அருகே கீழப்பணையடியேந்தலைச் சேர்ந்த இளம்பெண் விஷம் குடித்து திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கீழப்பணையடியேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மீனாட்சி (19). இவர்களுக்கு திருமணமாகி 5 மாதங்கள் தான் ஆகின்றன.
இந்நிலையில் மீனாட்சி பழங்குளத்தில் உள்ள தனது தாத்தா சுப்பிரமணியன் உடல் நிலை சரி இல்லாமல் இருப்பதாகவும், அவரைப் பார்த்து விட்டு வருவதாகவும் வெளிநாட்டில் உள்ள தனது கணவரிடம் அனுமதி கேட்டாராம். இதற்கு கணவர் அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது.
இதில் மனம் உடைந்த மீனாட்சி வீட்டில் விஷம் குடித்து விட்டாராம். உடனே அவரை முதுகுளத்தூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியில் அவர் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து மீனாட்சியின் தந்தை முத்துகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் முதுகுளத்தூர் எஸ்.ஐ. சரவணன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.