விளங்குளத்தூரில் மாசு கட்டுப்பாடு தின விழா
முதுகுளத்தூர்: விளங்குளத்தூர் அரசு உயர்நிலைபள்ளியில் தேசிய மாசு கட்டுப்பாடு தின விழா நடந்தது. தலைமை ஆசிரியர் ராஜம்மாள் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் சுமதி முன்னிலை வகித்தார்.
6 முதல் 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடந்தன. வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஊராட்சி தலைவர் கனகவள்ளி, தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் கணபதியம்மாள் செய்தனர்.