வாடகை கட்டடத்தில் செயல்படும் கிளை நூலகம்: அரசு நிதி வீணடிப்பு

Vinkmag ad

முதுகுளத்தூர்: முதுகுளத்தூரில் பல ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் செயல்படும், கிளை நூலகத்தால் அரசு நிதி வீணடிக்கப்பட்டு வருகிறது.

முதுகுளத்தூரில் பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் போட்டி தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் இங்குள்ள கிளை நூலகம் மூலம் பயனடைந்து வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. போதிய புத்தகங்கள் இருந்தும், குறுகிய இடத்தில் செயல்படுவதால் வாசகர்கள் இடநெருக்கடியில் தினமும் அவதிப்பட்டு வருகின்றனர்.
தவிர, முதுகுளத்தூரிலிருந்து ஒரு கி.மீ., தூரம் கமுதி ரோட்டில் இந்நூலகம் அமைந்துள்ளதால் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. எனவே, சொந்த கட்டடம் கட்டுவதற்கு மாவட்ட நூலகத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து இளஞ்செம்பூர் உமையலிங்கம் கூறுகையில், “” முதுகுளத்தூர் பகுதியில் கிளை நூலகம் கட்டுவதற்கான போதிய இட வசதி உள்ளது. அரசு நிதி வீணடிக்கப்படுவதை தவிர்க்கும் பொருட்டு சொந்த கட்டடம் கட்ட அரசு முன்வரவேண்டும்” என்றார்.

News

Read Previous

விளங்குளத்தூரில் மாசு கட்டுப்பாடு தின விழா

Read Next

நலவாழ்வு கூட்டம்

Leave a Reply

Your email address will not be published.