விளங்குளத்தூரில் கபடிப் போட்டி
முதுகுளத்தூர் அருகே விளங்குளத்தூர் கிராமத்தில் கபடிப்போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.
இப்போட்டியில் 60 அணிகள் கலந்து கொண்டன. கபடி போட்டிக்கு ஊராட்சித் தலைவர் கனகவள்ளி முத்துவேல் தலைமை வகித்து, தொடங்கி வைத்தார். இதில், முதல் பரிசை காத்தாகுளம் சரவணா ராம்ஜி அணியினரும், இரண்டாவது பரிசை மருதகம் அணியினரும், மூன்றாவது பரிசை திருச்சி அம்மன் செவன்ஸ் அணியினரும் பெற்றனர். போட்டிக்கான ஏற்பாடுகளை கருமல் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் செய்தனர். கபடி போட்டியினை ஏராளமான கிராம மக்கள் பார்வையிட்டனர்.