விளங்குளத்தூரில் “அம்மா’ திட்ட முகாம்
முதுகுளத்தூர் அருகே உள்ள விளங்குளத்தூர் ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு சமூக நல பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் பவானி தலைமை வகித்தார். வட்ட வழங்கல் அலுவலர் விஜயக்குமார், மண்டல துணை வட்டாட்சியர் லலிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சித் தலைவர் கனகவள்ளி முத்துவேல் வரவேற்றார். முகாமில் பயனாளிகளிடமிருந்து 22 மனுக்கள் பெறப்பட்டு அவற்றை அனைத்தும் தகுதியானவையாக தீர்மானிக்கப்பட்டன. முகாமில் வருவாய் ஆய்வாளர் கதிரவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மடத்தாகுளத்தில் அம்மா திட்ட முகாம்: கடலாடி வட்டம் மாரியூர் வருவாய் குரூப் மடத்தாகுளம் ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. முகாமுக்கு கடலாடி வட்டாட்சியர் வி. விஜயா தலைமை வகித்தார்.
வட்ட வழங்கல் அலுவலர் செந்தில்முருகன் முன்னிலை வகித்தார். முகாமில் 18 மனுக்கள் கொடுக்கப்பட்டு அனைத்துக்கும் தீர்வு காணப்பட்டன. முகாமில் வருவாய் ஆய்வாளர் தினகரன், கிராம நிர்வாக அலுவலர் ஜெயக்கொடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.