விலையில்லா பொருள்கள் வழங்கல்

Vinkmag ad

முதுகுளத்தூர் தாலுகாவில் விலையில்லா மிக்ஸி,கிரைண்டர், மின்விசிறிகளை கைத்தறி, ஜவுளித்துறை அமைச்சர் எஸ்.சுந்தர்ராஜன் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா வெங்கலகுறிச்சி,கொளுந்துறை, பிரபக்களூர் ஆகிய ஊராட்சிகளில்  2908 பயனாளிகளுக்கு விலையில்லா மிக்ஸி,கிரைண்டர் மற்றும் மின்விசிறிகள் வழங்கப்பட்டன. விழாவிற்கு அமைச்சர் எஸ்.சுந்தர்ராஜன் தலைமை வகித்தார்.

மாவட்டச் செயலர் ஏ. முனியசாமி, முதுகுளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.முருகன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் எம்.சுந்தரபாண்டியன், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு வாரியத்தலைவர் ஜி.முனியசாமி, ஜெ. பேரவை மாவட்டப் பொருளாளர் மலைக்கண்ணன், ஒன்றியச் செயலர் ஆர் தர்மர், ஒன்றியத் தலைவர் சுதந்திராகாந்தி இருளாண்டி, மாவட்டக் கவுன்சிலர் கே.கர்ணன், கவுன்சிலர் ஹேமா, ஒன்றிய இளைஞரணி துணைச்செயலர் செந்தில்குமார், தமிழ்நாடு மத்திய கூட்டுறவு சங்கத் தலைவர் ஜெயஜோதி, பரமக்குடி வருவாய் கோட்டாச்சியர் குணாலன், சிறப்பு அமுலாக்க பிரிவு வட்டாட்சியர் பி.ராஜேந்திரன், முதுகுளத்தூர் தாசில்தார் ரவிராஜ்,  வெங்கலகுறிச்சி ஊராட்சித்தலைவர் சுதாசண்முகம், கொளுந்துறை ஊராட்சித் தலைவர் கஜேந்திரன்,  பிரபக்களூர் ஊராட்சித்தலைவர் சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News

Read Previous

அல்சரை விரட்டும் அமுத பானம் இளநீர்

Read Next

வீரபாண்டிய கட்டபொம்மன்

Leave a Reply

Your email address will not be published.