வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம்

Vinkmag ad

கடலாடி: கடலாடி – முதுகுளத்தூர் ரோட்டில் போக்குவரத்துக்கு இடைறாக கம்பு, குதிரை வாலி உள்ளிட்ட சிறு தானிய பயிர்களை காயப்போடுவதால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடலாடி- முதுகுளத்தூர் பகுதியில் சிறு தானிய பயிர்களான கம்பு, குதிரைவாலி, சோளம் உள்ளிட்ட பயிர்கள் அறுவடையை எட்டியுள்ளது. இந்த தானிய பயிர்களை வெயிலில் உலர்த்தும் வகையில் ரோட்டில் பரப்பப்படுகிறது. பயிர்
களின் தோகைகள் வாகனங்களின் சக்கரங்கங்
களில் சிக்கி கொள்வதால், வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து செல்லும் பரிதாப நிலை உள்ளது.

 

மேலும், காற்றடிக்கும் நேரங்களில் கழிவுகளில் இருந்து வெளியேறும் தூசிகள் ரோட்டில் நடந்து செல்பவர்களின் கண்களை பதம் பார்த்து வருகிறது. இதுபோன்ற பல்வேறு பல்வேறு வகைகளில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகளுக்கு பெரும் விபத்து ஏற்படும் முன், இதுபோன்ற செயலில் ஈடுபடுவதை விவசாயிகள் தவிர்க்க வேண்டும்.

News

Read Previous

ரூ 1.30 கோடியில் இலவச பொருட்கள் வழங்கும் விழா

Read Next

சமத்துவ பொங்கல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *