ரூ 1.30 கோடியில் இலவச பொருட்கள் வழங்கும் விழா
முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் அருகே புழுதிக்குளம், எஸ்.பி.கோட்டை, உலையூர், மட்டியரேந்தலில் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகள் வழங்கும் விழா, பரமக்குடி ஆர்.டி.ஓ., குணாளன் தலைமையிலும், ஊராட்சி தலைவர்கள் சுப்பிரமணியன் (புழுதிக்குளம்), சுந்தரராஜ் (எஸ்.பி.கோட்டை), மகேஷ்கந்தன் (உலையூர்), சூசையம்மாள் (பொன்னக்கனேரி) முன்னிலையிலும் நடந்தது.
தாசில்தார் மோகன் வரவேற்றார்.
ஒரு கோடியே 30 லட்சத்து ஆயிரத்து 725 ரூபாய் மதிப்பிலான, விலையில்லா பொருட்களை அமைச்சர் சுந்தரராஜ், மாவட்ட செயலாளர் முனியசாமி, எம்.எல்.ஏ., முருகன், மாவட்ட பஞ்., தலைவர் சுந்தரபாண்டியன், சேமிப்பு கிடங்கு வாரிய தலைவர் ஜி.முனியசாமி, மாவட்ட முன்னாள் செயலாளர் ஆணிமுத்து, ஒன்றிய செயலாளர்கள் தர்மர் (முதுகுளத்தூர்), முனியசாமிபாண்டியன் (கடலாடி), ஒன்றியக்குழு தலைவர்கள் சுதந்திராகாந்தி (முதுகுளத்தூர்), மூக்கையா (கடலாடி) ஆகியோர் வழங்கினர்.
ஒன்றிய இளைஞரணி இணை செயலாளர் செந்தில்குமார், மீனவரணி செயலாளர் முருகேசன், மாவட்ட இளைஞரணி பொருளாளர் ராமசாமி, மாநில விவசாய அணி இணை செயலாளர் கர்ணன், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற துணை தலைவர் சுந்தரமூர்த்தி, ஊராட்சி தலைவர்கள் செல்வம் (சாத்தனூர்), சேதுராமன் (சாம்பக்குளம்), முருகவள்ளி (கிடாத்திருக்கை), சுந்தரசாமி (ஏனாதி), லட்சுமணன் (செம்பொன்குடி),
ஒன்றிய கவுன்சிலர்கள் பூமிநாதன் (கிடாத்திருக்கை), ராஜேந்திரன் (கொளுந்துரை), ஊராட்சி செயலர்கள் காளிமுத்து(எஸ்.பி.கோட்டை), முருகேசன் (செம்பொன்குடி) பங்கேற்றனர்.