லாரி மோதி பள்ளி மாணவர் பலி
முதுகுளத்தூர் அருகே ஏனாதி விலக்கு ரோட்டில் லாரி மோதியதில் பள்ளி மாணவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள ஏனாதியைச் சேர்ந்தவர் வடிவேல் மகன் மகாலிங்கம்(15). சம்பவத்தன்று ஏனாதி விலக்குரோட்டை கடக்கும் போது முதுகுளத்தூரில் இருந்து கடலாடி சென்ற லாரி மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புகாரின் பேரில் லாரி ஓட்டுநர் சோமசுந்தரம்(28) மீது போலீஸார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.