விண்ணப்பங்கள் தேவையில்லை: வங்கி கணக்கு தொடங்க ஆதார் அட்டை போதும்!
புதுடெல்லி: வங்கி கணக்கு தொடங்க
ஆதார் அட்டை மட்டுமே போதும் என ஆதார்
அடையாள அட்டை வழங்கும் அமைப்பின்
தலைவர் நந்தன்
நிலேகனி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ”ஆதார்
அட்டை வைத்திருப்பவர் தொடர்பான
அனைத்து தகவலும், அந்த அடையாள
அட்டையில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
எனவே, வங்கி கணக்கு தொடங்க, வங்கியில்
உள்ள கம்ப்யூட்டரில் ஆதார் அடையாள
அட்டையை சொருகினால் போதும். அதில்
உள்ள தகவல்கள் அனைத்தும், வங்கிக்
கணக்கு துவக்கும்
பிரிவுக்கு மாறிவிடும்.
வங்கிகளில் கணக்கு துவக்க
வேறு விண்ணப்ப படிவம் எதையும் நிரப்பத்
தேவையில்லை. எனினும்,
அடையாளத்தை உறுதி செய்வதற்காக,
விண்ணப்பதாரர் தன்
கைரேகையை பதிவு செய்வது
கட்டாயமாக இருக்கும். கூடுதலாக
எதையும் தர வேண்டிய அவசியம் இல்லை”
என்றார்.
நன்றி : விகடன்
தகவல் :
நமது சிறப்பு நிருபர்
முஹம்மது துல்கிஃப்லி