லாரி மோதி பள்ளி மாணவர் காயம்
முதுகுளத்தூர் அருகே இருசக்கரவாகனம் மீது லாரி மோதியதில் மாணவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா கீழச்சிறுபோதைச் சேர்ந்தவர் செந்தூர்பாண்டி. இவரது மகன் கேசவமூர்த்தி(11). சிக்கலில் உள்ள தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறாரார். கேசவமூர்த்திக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு இருசக்கரவாகனத்தில் செந்தூர்பாண்டியும், மகன் கேசவமூர்த்தியும் திரும்பிக்கொண்டிருந்தனர்.
அப்போது எதிரே வந்த லாரி நிலை தடுமாறி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் கேசவமூர்த்தி படுகாயம் அடைந்து முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து இளஞ்செம்பூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் கண்ணனைகைது செய்தனர்.