ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சியில் முதல்வர் தனிக்கவனம் செலுத்துகிறார்

Vinkmag ad

ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சியில் முதல்வர் தனிக்கவனம் செலுத்தி வருகிறார் என முருகன் எம்.எல்.ஏ. கூறினார்.

கமுதி சத்திரிய நாடார் ஆண்கள் மேனிலைப்பள்ளியில் 222 மாணவர்களுக்கும், சத்திரிய நாடார் பெண்கள் மேனிலைப்பள்ளியில் 299 மாணவிகளுக்கும், கலாவிருத்தி மேனிலைப்பள்ளியில் 108 மாணவ, மாணவிகளுக்கும்,  கோட்டை மேடு அரசு மேனிலைப்பள்ளியில் 69 மாணவ, மாணவிகளுக்கும் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தலைமை ஆசிரியர்கள் செ.மலையரசன், ராமலிங்கம், து.சேர்மம், ஜெரினா பீவி ஆகியோர் வரவேற்றனர். விழாவில் மாணவ மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கி, மு.முருகன் எம்.எல்.ஏ. பேசியது:  எளிய சமுதாயத்தினர் அனைவரும் வாழ்க்கையில் முன்னேற,  அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார். ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சியில் முதல்வர் தனிக்கவனம் செலுத்தி வருகிறார்.

மாவட்டத்தில் கடலாடி, திருவாடானை, முதுகுளத்தூர் ஆகிய பகுதிகளில் அரசு க்கல்லூரிகளைத் துவக்க முதல்வர் உத்தரவிட்டார். இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் உயர் கல்வி வளர்ச்சி அமோகமாக உள்ளது என்றார்.

விழாவில் ஊராட்சி ஒன்றிய அவைத்தலைவர் வழக்குரைஞர் த.பாலு, பேரூராட்சி தலைவர் எஸ்.கே.சி.ரமேஷ் பாபு, பேரவை பொருளாளர் மலைக்கண்ணன், கமுதி ஒன்றிய அவைத்தலைவர் க.சிங்கம்(எ)முத்துராமலிங்கம், நகரச் செயலர் கே.பி.எம்.கந்து இக்பால், ஒன்றிய இளம்பெண்கள்-இளைஞர் பாசறை செயலர் வி.கே.ஜி.முத்துராமலிங்கம், ஆசிரியர், ஆசிரியைகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

News

Read Previous

கால எல்லைகள்

Read Next

அச்சுக்கூடம் இருந்தும் அயலாக்கப் பணியில் அச்சிடப்படும் நூல்கள்!

Leave a Reply

Your email address will not be published.