ராமநாதபுரம் மாவட்ட கபடி அணி வீரர்கள் தேர்வு

Vinkmag ad

முதுகுளத்தூர் சோனை மீனாள் மகளிர் கல்லூரியில் புதன்கிழமை ராமநாதபுரம் மாவட்டத்தில் 80 கிலோ எடை பிரிவில் கபடி அணி வீரர்களை தேர்ந்தெடுத்தனர்.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கபடி அணி வீரர்களை தேர்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்துக்கான கபடி அணி வீரர்களை, சோனை மீனாள் கலைக் கல்லூரில் அணி தேர்வாளர்கள் டி. ஜெயக்குமார், ஆர். பிரபாகரன், ஆர். கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் தேர்ந்தெடுத்தனர்.

இதில் ஆப்பனூரைச் சேர்ந்த எஸ். குமரன், ஏ. கார்த்திகேயன்,டி. செந்தூர், பி. வேல்முருகன், எஸ். ராஜ்குமார், மேலாய்க்குடி விசாகம், பாம்பூர் அரவிந்தராஜன், எமனேஸ்வரம் சசிக்குமார், செல்லூர் பாலமுருகன், கரிசல்குளம் ராஜீவ் காந்தி, சக்திவேல் ஆகியோரை மாவட்ட கபடி அணி வீரர்களாக தேர்ந்தெடுத்துள்ளனர். உடற்கல்வி ஆசிரியர்கள் ஆர். சிவக்குமார், சிந்தாமணி, அதிசயம், தலைமை ஆசிரியர் கலைமுருகன் ஆகியோர் விளையாட்டு வீரர்களை தேர்வு செய்ய உதவி புரிந்தனர்.

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கபடி வீரர்கள் தருமபுரில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (நவ. 29, 30) நடைபெற உள்ள கபடிப் போட்டியில் கலந்து கொள்வார்கள் என உடற்கல்வி இயக்குநர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

News

Read Previous

பிழைகளில்லாப் பிழை திருத்திகள் தேவை!

Read Next

ஆதார் அட்டை பதிவுக்கு 11 மையங்கள்

Leave a Reply

Your email address will not be published.