யோகா போட்டி
முதுகுளத்தூர் : பரமக்குடி ஆர்னவ் கடல் யோகா நிலையம் சார்பில், ஆயிர வைசிய மெட்ரிக் பள்ளியில், மாவட்ட அளவிலான யோகா போட்டிகள் நடந்தன.
யோக பயிற்றுநர் ராஜ்குமார் வரவேற்றார். அமைச்சர், நகராட்சி தலைவர் கீர்த்திகா, பள்ளி தாளாளர் முருகானந்தம் கலந்து கொண்டனர். பல்வேறு பள்ளிகளின் சார்பில் நூற்றுக் கணக்கான மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட பயணம் செய்தனர். சுரேஷ்கண்ணன் நன்றி கூறினார்.
போட்டியில் முதுகுளத்தூர் காமராஜர் மெட்ரிக்., பள்ளி மாணவர்கள் 23 பேர் கலந்து கொண்டு, சாம்பியன் பட்டம் வென்றனர். அவர்களுக்கு பள்ளி தாளாளர் கனகராஜ், பொருளாளர் ஜெயராஜ், கல்விக்குழு தலைவர் செல்வகுமார், தணிக்காசலம், முதல்வர் எழிலரசி, ஆசிரியர்கள் பாராட்டினர்.