தேசிய நுகர்வோர் உரிமை தின விழா
முதுகுளத்தூர் பள்ளி வாசல் மேல்நிலைப்பள்ளியில் புதன்கிழமை மாவட்ட அளவிலான தேசிய நுகர்வோர் உரிமை தின விழா நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சோ. விஸ்வநாதன் தலைமை வகித்தார். துணை ஆட்சியர் சி.சு. சமீரான், நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத் தலைவர் கரீம்கனி, வட்டாட்சியர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புத்துறை அலுவலர் ந. சாந்தி வரவேற்றார்.
விழாவில் ரஹ்மானிய ஐ.டி.ஐ. நிறுவனர் அப்துல்காதர் பேசினார். ஒன்றியக்குழுத் தலைவர் ஐ. சுதந்திராகாந்தி இருளாண்டி, பேரூராட்சி செயல் அலுவலர் ஆர். இளவரசி, துணைத் தலைவர் ஏ. பாசில் அமீன், பள்ளித் தலைமை ஆசிரியர் ஓ.ஏ. முகம்மது சுலைமான், உதவித் தலைமை ஆசிரியர் ஹெச்.எம். முகம்மது சுல்தான் அலாவுதீன், அன்பு தொண்டு நிறுவனத் தலைவர் கோ. உமையலிங்கம், ஜே.ஆர்.சி. திட்ட அலுவலர் பரமேஸ்வரன், நுகர்வோர் பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் கே. வாணிதாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முடிவில் வட்ட வழங்கல் அலுவலர் மு. விஜயக்குமார் நன்றி கூறினார்.