முதுகுளத்தூர் பேரூராட்சியில் கொசு மருந்து தெளிப்பு
முதுகுளத்தூர் பேரூராட்சி சார்பாக தெருக்களில் தொற்று நோய்கள் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரூராட்சி அலுவலர்கள் கொசு மருந்து அடித்தனர்.
முதுகுளத்தூரில் தொடர்மழை காரணமாக தெருக்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் கொசுக்களினால் டெங்கு காய்ச்சல், மலேரியா போன்ற தொற்று நோய்கள் வராமல்
இருப்பதற்காக முன்னெச்சரிக்கையாக பேரூராட்சி தலைவர் சசிவர்ணம் ராமர் உத்தரவின் பேரில் செயல் அலுவலர் இளவரசி மேற்பார்வையில் அனைத்து தெருக்களிலும்,
மற்றும் அரசு மருத்துவமனை,பேருந்து நிலையம், காவல்நிலையம் போன்ற இடங்களிலும் பேரூராட்சி ஊழியர்கள் கொசு மருந்து அடித்தனர்.