சிறுபாசன கண்மாய்கள் கணக்கெடுப்புப் பயிற்சி
முதுகுளத்தூர் சுற்று வட்டாரத்தில் உள்ள பாசனக் கண்மாய்கள் கணக்கெடுப்பு பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வட்டாட்சியர் எஸ்.ராமமூர்த்தி தலைமையில் வகித்தார். மண்டல துணை வட்டாட்சியர் சதீஷ்குமார், வருவாய் ஆய்வாளர் காசிநாதத்துரை ஆகியோர் முன்னிலை
வகித்தனர். சிறுபாசன கண்மாய்கள் கணக்கெடுப்பு முறையை புள்ளிஇயல் ஆய்வாளர் மைக்கேல் செல்வி விளக்கினார். பயிற்சியின் போது வருவாய் ஆய்வாளர்கள்
ஜெயச்சந்திரன், முருகன், முருகராஜா, கதிரவன், கிராம நிர்வாக அலுவலர் தினேஷ் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.