முதுகுளத்தூர் பகுதியில் பலத்த மழை

Vinkmag ad

முதுகுளத்தூர் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை சூறாவளியுடன் பலத்த மழை பெய்தது.

இதில் முனியன் கோயில் விலக்குச் சாலையிலிருந்து பூங்குளத்திற்குச் செல்லும் பாதையில் மரங்கள் மற்றும் மின்கம்பம் சாலையில் சாய்ந்தன.

இதனால் கடலாடி, சாயல்குடி வழியாக திருச்செந்தூர் செல்லும் சாலையில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மின் வாரிய பொறியாளர் மலைச்சாமி மற்றும்  மின் ஊழியர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்து சாலையில் கிடந்த மின் வயர்களை சீரமைத்தனர். இதே போல தேவர்குறிச்சி, ஏனாதி        கிராமங்களிலும் பலத்த மழை பெய்தது.

News

Read Previous

ரமளான்

Read Next

அறிவின் எல்லை கண்ட திருவள்ளுவர் – கவிமணி

Leave a Reply

Your email address will not be published.