ரமளான்

Vinkmag ad

 

( ஆலிம் புலவர் எஸ். ஹுஸைன் முஹம்மது )

 

ரமளான் பிறை

வானில் தெரிந்தது

பேஷ் இமாம் தொழுகையை முடித்து

ஸலாம் கொடுக்கத் திரும்பினார்

முன் வரிசையில்

எல்லாமே

புதுமுகங்கள் !

 

தெருத்தெருவாக

தப்ஸ் அடித்து

மக்களை ஸஹருக்கு எழுப்பிவிட்ட

பக்கீர்ஷா

வீட்டிற்குள் போய் உறங்கினார்

நோன்பு பிடிக்காமல் !

 

வாழ்நாளில்

ஒரு நோன்பு கூட பிடித்திராத

மர்ஹூம் ஊனா மூனாவின்

நினைவாக அவர் மகன்

நோன்பு திறக்க

நோன்புக் கஞ்சி ஊற்றினார் !

 

தராவீஹ் முடித்தவுடன் அவசரமாக

ஊருக்குப் புறப்பட்டார் ஹாபிஸ்

ஊதியத்துடன் –

நிச்சயிக்கப்பட்ட

அவரது தங்கையின் வரனுக்குத்

தட்சணை கொடுக்க வேண்டும் !

 

 

நன்றி : இனிய திசைகள், அக்டோபர் 2005

News

Read Previous

அயல்தேசத்து வாழ்க்கை

Read Next

முதுகுளத்தூர் பகுதியில் பலத்த மழை

Leave a Reply

Your email address will not be published.