அயல்தேசத்து வாழ்க்கை
அல்லும் பகலும் நாங்க அயராது உழைச்சிகிட்டு
அன்புக்காக ஏங்குகின்றோமே அயல்தேசத்திலே
அன்புக்காக ஏங்குகின்றோமே
மற்றவர் போற்றிடவும் மதிப்பா இருந்திடவும்
மாடாகத்தான் உழைக்கின்றோமே மனகழ்ட்டத்தோட
மாடாகத்தான் உழைக்கின்றோமே
எண்ணத்தில் எத்தனையோ ஆசைகள் இருந்திருந்தும்
எல்லாத்தையும் மறந்துபுட்டு நாங்கலுமே
எல்லாத்தையும் மறந்துபுட்டு
அன்புக்கு ஏங்குகின்ற நெஞ்சத்தோட நாங்கலுமே
காசுக்காக உழைக்கின்றோமே அயல்தேசத்திலே
காசுக்காக உழைக்கின்றோமே
வானைத்தொடும் அளவிலே வண்ணமிகு கட்டிடங்கள்
வனப்பாக காட்சி தருமே பார்ப்பதற்கு
வனப்பாக காட்சி தருமே
அது எங்களது வேர்வையாலே எழுந்து நிற்குதுன்னு
யாருக்குமே தெரியாதுங்கோ பார்ப்பவர்கள்
யாருக்குமே தெரியாதுங்கோ
ஊருக்கு போயிநாங்க உல்லாசமா இருந்திடவே
உற்சாகமா புறப்படுவோம் நாங்கலுமே
உற்சாகமா புறப்படுவோம்
ஊருக்கு போகையிலே உண்மையாக நாங்கலுமே
பகட்டாக புறப்படுவோம் பளபளக்க
பகட்டாக புறப்படுவோம்
தாயகம் விட்டு நாங்க தனிமையில் புறப்பட
தவியாய் தவித்திடுவோமே வருகையில்
தவியாய் தவித்திடுவோமே
கல்நெஞ்சு காரர் என்று கல்லாக நின்றாலுமே
கண்களுந்தான் கலந்கிடுமே ஒருகனம்
கண்களுந்தான் கலந்கிடுமே.
தமிழிசைக் கவிஞன்
கலைச்சுரபியின் தெம்மாங்கு ராகம்
பி.வி.கோவிந்தராசன்.
pvgovinda67@gmail.com