முதுகுளத்தூர் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் பிரசாரம்
முதுகுளத்தூர், கமுதி, சாயல்குடி பகுதிகளில் அதிமுக வேட்பாளர் பிரசாரம்
முதுகுளத்தூர் தொகுதியில் கமுதி, சாயல்குடி ஒன்றியங்களில் அதிமுக வேட்பாளர் எம். கீர்த்திகா முனியசாமி செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தார்.
கமுதி,சாயல்குடி நகரில் உள்ள வார்டுகளில் பொதுமக்களிடையே அதிமுக வேட்பாளர் எம். கீர்த்திகா முனியசாமி வாக்கு சேகரித்தார். அப்போது, அவருக்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். முதுகுளத்தூரில் எம்.எல்.ஏ. முருகன் தலைமையில் வேட்பாளர் எம். கீர்த்திகா முனியசாமி வாக்குகள் சேகரித்தார். அப்போது, முன்னாள் மாவட்டச் செயலர் எம்.ஏ. முனியசாமி, மாவட்ட வழக்குரைஞர் பிரிவு செயலர் ஷங்கரபாண்டியன், தொகுதி கழக செயலர் காளிமுத்து, கவுன்சிலர்கள் பன்னீர்செல்வம், மாடசாமி, ஒன்றியச் செயலர் கருப்பசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து, கமுதியில் உள்ள முக்கியமான வீதிகளில் வேட்பாளர் எம்.கீர்த்திகா முனியசாமி வாக்குகள் சேகரித்தார். அவருடன், ஒன்றியச் செயலாளர் மீனாட்சி சுந்தரம், ஒன்றியக் குழுத் தலைவர் டி. பாலு, நகரச் செயலர் இக்பால், மாவட்டக் கவுன்சிலர் சதன்பிரபாகர், பாசறை செயலர் வி.கே.சி. முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் சென்று வாக்கு சேகரித்தனர்.
சாயல்குடி பேருந்து நிலையம் மற்றும் முக்கிய வீதிகளில் வாக்குகளை சேகரித்த வேட்பாளருடன், ஒன்றியக் குழுத் தலைவர் வீ. மூக்கையா, ஒன்றியச் செயலர்கள் முனியசாமி பாண்டியன், அந்தோணிராஜ், கூட்டுறவு தலைவர் முகம்மது ரபீக் உள்ளிட்டோர் சென்றனர்.