முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் வாலிபர் அடித்துக்கொலையா?? உறவினர்கள் மறியல்.
முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் வாலிபர் அடித்துக்கொலையா?? உறவினர்கள் மறியல்.
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வடக்கூர் பகுதியில் மகாதேவன் என்பவர் வீட்டில் 16 பவுண் நகை மற்றும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் திருடியதாக சந்தேகிக்கபட்டு அதே பகுதியை சேர்ந்த வடக்கூர் மணிகண்டன் த/பெ மாசிலாமணி (27) முதுகுளத்தூர் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்று அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது.
பின்பு காயம்பட்ட மணிகண்டனை முதுகுளத்தூர் காவல்நிலையத்திலிருந்து பரமக்குடிக்கு அரசு மருத்துவனைக்கு கொண்டுசெல்லும்போதே காலமானார்.அடித்து துன்புருத்தி கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் பஸ் மறியல் செய்தனர்.இச்சம்பவம் குறித்து ADSP வெள்ளைத்துரை அவர்கள் சம்பவ இடத்திற்க்கு வந்து விசாரணை நடத்திவருகிறார்.