முதுகுளத்தூர், கடலாடி பகுதிகளில் 3 புதிய பேருந்து வழித்தடம்
முதுகுளத்தூர்,கடலாடி பகுதியில் பஸ் போக்குவரத்து இல்லாத கிராமங்களுக்கு புதிய பேருந்துகளை கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் எஸ்.சுந்தரராஜ் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
முதுகுளத்தூர் அருகே வாத்தியனேந்தல் கிராமத்திலிருந்து செல்லூர் வழியாக பரமக்குடிக்கு புதிய பேருத்தை அமைச்சர் சுந்தர்ராஜன் கொடியசைத்து துவங்கி வைத்தார்.விழாவில் முதுகுளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.முருகன், மத்திய கூட்டுறவு சங்க தலைவர் ஜோதி, ஒன்றிய செயலாளர் ஆர்.தர்மர், ஜெ.பேரவை மாவட்ட பொருளாளர் மலைக்கண்ணன்,ஒன்றிய குழுத் தலைவர் சுதந்திராகாந்தி இருளாண்டி,மாவட்ட கவுன்சில்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கடலாடி தாலுகா எம்.கரிசல்குளத்திலிருந்து ஏழு கிராம மக்களுக்கு பயன்படும் வகையில் கடலாடி-சாயல்குடி வரை புதிய பேருந்துகளை துவங்கிவைத்தார். விழாவில் கடலாடி ஒன்றிய குழுத் தலைவர் வி.மூக்கையா, ஒன்றிய செயலாளர் முனியசாமி பாண்டியன், ஒன்றிய அவைத்தலைவர் வேலுச்சாமி, கடுகுசந்தை ஊராட்சித் தலைவர் முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிக்கல் வழியாக மத்தியல்,ராஜாக்கள்பாளையம், ஏர்வாடி, கீழக்கரைக்கு புதிய பேருந்தையும் அமைச்சர் தொடங்கி வைத்தார். மேலச்சிறுபோது கூட்டுறவு சங்க தலைவர் ரபீக், ஒன்றிய கவுன்சிலர்கள் கே.எம்.போஸ், சித்திரவேலு, பால்பாண்டி, வர்த்தக சங்க தலைவர் ஹரிகரன், ஊராட்சி தலைவர்கள் சிறைக்குளம் ரமேஷ்பாபு, ஒருவானேந்தல் சத்தியமூர்த்தி,இளஞ்செம்பூர் மயிலேறிவேலன், எஸ்.பி.கோட்டை சுந்தரராஜ் உள்பட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.