புளியங்குடியில் மக்கள் தொடர்பு முகாம்

Vinkmag ad

முதுகுளத்தூர் தாலுகா புளியங்குடியில் புதன்கிழமை மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமாரின் உத்தரவின் பேரில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள தட்டானேந்தலில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட உதவி ஆணையம் (ஆயம்) சண்முகம் தலைமை தாங்கினார்.

தாசில்தார் ஆர்.ரவீந்திரநாதன், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் லீலாவதி, மண்டல துணை வட்டாட்சியர் சதீஸ், வட்ட வழங்கல் அலுவலர் கிருஷ்ணசாமி, வருவாய் அலுவலர் அமர்நாத், கிராம நிர்வாக அலுவலர் தெய்வேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் குடும்ப அட்டை வழங்கல், பட்டாமாறுதல், வீட்டுமனை பட்டா வழங்குதல், முதியோர் உதவித்தொகை என 73 மனுக்கள் பெறப்பட்டு அதில் 16 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டன.

News

Read Previous

முதுகுளத்தூர், கடலாடி பகுதிகளில் 3 புதிய பேருந்து வழித்தடம்

Read Next

முதுகுளத்தூர் கடைகளில் திருட்டு

Leave a Reply

Your email address will not be published.