முதுகுளத்தூர் அருகே மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

Vinkmag ad

முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் அருகேயுள்ள குருவிக்காத்தி நடுநிலைப்பள்ளியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
பேரணிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் முருகன், கடலாடி யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி வளாகத்தில் இருந்து மாணவ, மாணவிகள் முக்கிய வீதிகள் வழியாக பேரணி சென்றனர்.  மழைநீர் சேகரிப்பு அடங்கிய பதாகைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பி மாணவ, மாணவிகள் ஊர்வலமாக சென்றனர்.

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சேதுராமச்சந்திரன், ஆசிரியர்கள் சகாயம், விமலாவதி, விமலா ஹோசினி, மருது, கிராமத் தலைவர்கள் கருப்பையா, காந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News

Read Previous

சுற்றி எரிகிறது; சுந்தரத் தீவு……………!!

Read Next

இந்திய நடுவண் அரசின் மொழிக்கொள்கை

Leave a Reply

Your email address will not be published.