சுற்றி எரிகிறது; சுந்தரத் தீவு……………!!

Vinkmag ad

 

சுற்றி எரிகிறது
…சுந்தரத் தீவு
நெற்றி வைத்து
…நீளமாய்க் கேளு

காலமும் காணாக்
…காட்சித்தான் பின்ன
பாலகர் செய்த
… பாவம்தான் என்ன?

கொடுமையிலும் கொடுமை
…கொலைசெயுமிவ் வன்மை
கடுமையுடன் தடுத்தால்
…களைந்துவிடும் தீமை

இறைவனின் கோபம்
….இவர்களைஅடையுமா?
விரைவுடன் தீர்ப்பு
…வந்திடவும்; மடிவர்

இறுதிநாள் வருகைக்கு
….இக்கொடுமை ஒருசான்றா?
உறுதியாய்க் கொடுமைக்கு
…உள்ளமெலாம் உருகாதா?

கொத்துக் கொலைகண்டு
…குழந்தைகள் நிலைகண்டு
கத்தும் கடல்கூட
…கதறுமே பழிதீர்க்க

தீர்ப்புநாள் வராதென்று
….தீதைச் செய்தாயோ?
யார்க்குமே அடங்காத
…யுத்தப் பித்தனே

அர்ஷில் எட்டும்
….அலறல் சத்தம்
குர்ஸி தட்டும்
…குழந்தை ரத்தம்

பாதிக்கப் பட்ட
…பள்ளியும் மக்களும்
நீதிக்கு முன்பு
…நிற்கின்ற வேளை

கூட்டுச் சதியால்
..கூடிக் குலாவி
வேட்டு வெடித்தல்
..வேடிக் கையே!

பொய்நாக் கூட்டம்
…புரிய வில்லையா?
ஐநா சபையோர்
…அறிய வில்லையா?

 
பிரிவினை கேட்டனரா?
…….பிரியமுடன் நடந்தனரா?
எரியுமுன் கோபமதில்
……இழந்ததுவுன் பகுத்தறிவே!


News

Read Previous

வாழ்வின் வசந்தமே வருக

Read Next

முதுகுளத்தூர் அருகே மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *