முதுகுளத்தூர் அருகே மதுவிற்ற பெண் கைது
முதுகுளத்தூர் அருகே இளஞ்செம்பூர் காவல் நிலைய சரகத்தில் புதன்கிழமை மதுவிற்ற பெண்னை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
முதுகுளத்தூர் அருகே பூக்குளம் கிராமத்தில் உள்ள குழந்தைவேலு மனைவி வள்ளி (55).
இவர் சம்பவத்தன்று போலி மதுப்பாட்டில்களை மறைமுகமாக விற்பனை செய்து வருவதாக தகவல் அறிந்த இளஞ்செம்பூர் காவல் நிலைய போலீஸார், மதுப்பாட்டில்களை விற்பனை செய்த வள்ளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.