முதுகுளத்தூரில் BSNL தோண்டிய பள்ளத்தில் விழுந்து மாடு பலி
முதுகுளத்தூரில் BSNL தோண்டிய பள்ளத்தில் விழுந்து மாடு பலி
இராமநாதபுரம் ஜன27.
இராமநாதபுரம் மாவட்டம்.முதுகுளத்தூரில் BSNL தோண்டிய பள்ளத்தில் பசுமாடு ஒன்று விழுந்துபலியானது. இந்த பள்ளமானது கடந்த பத்து நாட்களாக தோண்டப்பட்டு வந்தது.ஆனால் மூடவில்லை பணிநடைபெற்றுக்கொண்டுதான் இருந்தன.அந்த பள்ளம் முதுகுளத்தூர் நகர் முழுவதும் தோண்டப்பட்டு இணையதள சேவைபெறுவதற்கான எலக்ட்ராணிக் வயர்களை பதித்து வந்தனர்.மாட்டின் உரிமையாளரான செல்லியம்மன் கோவில்தெருவைச்சேர்ந்த மகாலிங்கம் என்பவர் நேற்று இரவு முழுவதும் மாட்டை காணவில்லை என்று தேடியுள்ளார். தேடியும் பலனில்லை.மறுநாள் தனியார்பள்ளி முன்பு தோண்டப்பட்டு இருந்த பள்ளத்தில் மாடு இறந்துள்ளதாக அவருக்கு தகவல் வந்தது.பின்பு முன்னாள் கவுன்சிலர் சீனிமுகம்மது ஏற்பாட்டில் பேரூராட்சி ஊழியர்கள் சேர்ந்து பள்ளத்தில் இறந்து கிடந்த மாட்டை ஜேசிபி இயந்திரம் மூலம் தூக்கி சுடுகாட்டில் புதைத்தனர்.