முதுகுளத்தூரில் 1068 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கல்
முதுகுளத்தூரில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி 1068 பயனாளிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
முதுகுளத்தூர் தனியார் மஹாலில் நடந்த இந்த விழாவுக்கு அன்வர்ராஜா எம்.பி. தலைமை வகித்தார். அப்போது 1068 பயனாளிகளுக்கு இலவச மூன்று சக்கர சைக்கிள், தையல் இயந்திரம், தேய்ப்பு பெட்டிகள், வேட்டி, சேலைகள் என ரூ.10 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை சட்டப் பேரவை உறுப்பினர் எம்.முருகனும், எம்.பி.அன்வர்ராஜாவும் வழங்கினர்.
விழாவில் முன்னாள் மாவட்டச் செயலர் எம்.ஏ.முனியசாமி, மாவட்ட இலக்கிய அணிச் செயலர் செந்தில்குமார், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ஜெயஜோதி, ஒன்றியச் செயலர்கள் கடலாடி முனியசாமிபாண்டியன், சாயல்குடி அந்தோனிராஜ், ஒன்றியக் குழுத் தலைவர் சுதந்திரகாந்தி இருளாண்டி, துணைத் தலைவர் மணிமுத்து, ஒன்றிய பாசறைச் செயலர் வி.கே.சி.முத்துராமலிங்கம், அபிராமம் பேரூராட்சித் தலைவர் குமணன், மாவட்ட ஜெ.பேரவை பொருளாளர் மலைக்கண்ணன், மாவட்ட கவுன்சிலர் கர்ணர், கவுன்சிலர்கள் தூரி.எம்.மாடசாமி செந்தில்குமார், தொகுதி கழக செயலர் பி.காளிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர். நகர் அவைத் தலைவர் வி.கருப்பசாமி நன்றி கூறினார்.