முதுகுளத்தூரில் விரைவு பட்டா மாறுதல் முகாம்
முதுகுளத்தூரில் விரைவு பட்டா மாறுதல் முகாம் வியாழக்கிழமை தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் விரைவு பட்டா மாறுதல் முகாமுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஸ்வநாதன் தலைமை தாங்கினார். முகாமில் 38 பயனாளிகளுக்கு விரைவு பட்டா மாறுதல் வழங்கப்பட்டது. வட்டாட்சியர் மோகன், மண்டல துணை வட்டாட்சியர் சிரோன்மணி, மண்டல துணை வட்டாட்சியர் மரகதமேரி, சமூக நலத்துறை வட்டாட்சியர் நீலாவதி மற்றும் அரசு அலுவலர்கள் முகாமில் கலந்து கொண்டனர்.