முதுகுளத்தூரில் வட்டார அளவிலான கோ-கோ, கபடி போட்டிகள்
முதுகுளத்தூர் டி.இ.எல்.சி. பள்ளி மைதானத்தில் வட்டார அளவிலான கோ-கோ, கபடி போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன.
போட்டிக்கு, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் எஸ். பிரசாத் தலைமை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியை ப்ரிட்டா செல்வக்குமாரி, உடற்கல்வி ஆசிரியர்கள் கமால் பாட்ஷா, வேதமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார அளவிலான கோ-கோ விளையாட்டுப் போட்டியில் 17 வயதுக்குள்பட்ட ஆண்கள் பிரிவில், 3 அணிகள் கலந்துகொண்டன. அதேபோல், 14 வயதுக்குள்பட்டோருக்கான பிரிவில் 12 அணிகள் கலந்துகொண்டன. இதில், முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி முதலிடமும், நரிப்பையூர் அலங்கார மாதா மேல்நிலைப் பள்ளி இரண்டாமிடமும் பெற்றன.
17 வயதுக்குள்பட்ட ஆண்கள் பிரிவில், 11 பள்ளிகள் கலந்துகொண்டன. இதில், சாயல்குடி அரசு மேல்நிலைப் பள்ளி முதலிடத்தையும், கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளி இரண்டாமிடத்தையும் பெற்றன.