என்ன செய்யலாம்

Vinkmag ad

என்ன செய்யலாம்

எந்தன் சொந்தக் கவிதையிது.
மந்தையில் யாரும் கொடுத்ததல்ல.
அந்த நாளில் ஆசிரியர் மாணவர்க்கு என்ன சொல்லுவார்?
சிந்தை குளிர செந்தமிழைத் தினந்தோறுங் கற்றிடுக
பெற்றோரை மதித்திடுக, இரப்போர்க்கு ஈதிடுக
வறியோர்க்கு உதவிடுக, இன்முகத்தைக் காட்டிடுக
எல்லாரிடமும் அன்பாய்ப் பேசிடுக
இந்த நாளில் ஆசிரியர் மாணவர்க்கு உறைப்பதென்ன?
சொந்தமாய் ஆங்கிலத்தில் தினமும் எழுதிடுக
சோம்பல் போக்க யோகாவைக் கற்றிடுக .
மாலையில் டியுஷன், உணவிலே சுருக்கம்,
உரத்த குரலில் பேசற்க, பேசாதிருந்தும் பழகிடுக
செந்தமிழைத் திண்ணமாய்க் கற்றதினால்
நந்தனார் சிவனிடங் கொஞ்சினார்
கீரனோ அதனையும் விஞ்சினார்
மிஞ்சினால் வாழ்க்கையோ சில்லாண்டு
நெஞ்சிலே நிறுத்தியிதை உணர்ந்திடுக.
தி. ஆறுமுகம்,
ஜூன் 20, 15.
பிருந்தாலயா,
239 பெரிய தெரு,
திருநெல்வேலி-627006

News

Read Previous

முதுகுளத்தூரில் வட்டார அளவிலான கோ-கோ, கபடி போட்டிகள்

Read Next

முதுகுளத்தூரில் ஒன்றியக் குழு கூட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *