முதுகுளத்தூரில் ஒன்றியக் குழு கூட்டம்
முதுகுளத்தூரில் ஒன்றியக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு, ஒன்றியக் குழுத் தலைவர் சுதந்திராகாந்தி இருளாண்டி தலைமை வகித்தார். ஆணையர் வழிவிட்டான் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், தேரிருவேலியில் பழைய மின்கம்பங்களை மாற்றி புதிய மின்கம்பங்களை அமைக்க வேண்டும். மணிபுரம் கிராமத்துக்கு காவிரி குடிநீர் விநியோகிக்க வேண்டும் என கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர். கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு ஆணையர் வழிவிட்டான் பதில் அளித்தார். இதில், கவுன்சிலர்கள் பலர் கலந்துகொண்டனர்.