முதுகுளத்தூரில் பொதுமக்களிடம் எம்.பி. குறைகேட்பு
முதுகுளத்தூர் சுற்றுவட்டாரக் கிராமங்களில் செவ்வாய்க்கிழமை பொதுமக்களிடம் அன்வர்ராஜா எம்.பி. குறைகளை கேட்டு மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.
ராமநாதபுரம் எம்.பி. அன்வர்ராஜா தாலியனேந்தல்,மட்டியனேந்தல், கடம்பொடை, பூசேரி, தேரிருவேலி, கருமல்காக்கூர்,பெரிய கையகம், ஆதனக்குறிச்சி,கிழவனேரி,ஆதங்கொத்தங்குடி உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களைப் பெற்றார்.
அதிமுக மாவட்டச் செயலர் ஆர்.தர்மர்,முதுகுளத்தூர் ஒன்றியச் செயலர் கருப்பசாமி,கடலாடி ஒன்றிய செயலர் முனியசாமி பாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.