முதுகுளத்தூரில் பெட்ரோல் குண்டு வீசிய இருவர் கைது
முதுகுளத்தூரில் பெட்ரோல் குண்டு வீசிய இருவர் கைது
முதுகுளத்தூரில் பெட்ரோல் குண்டு வீசிய இருவரை வியாழக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
முதுகுளத்தூர் பாரத ஸ்டேட் வங்கி எதிரில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு மர்மநபர்கள் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பி ஓடினர்.
இதுதொடர்பாக புகாரின் பேரில் முதுகுளத்தூர் காவல்துறை துணைகண்காணிப்பாளர் உதயசூரியன் உத்தரவின் பேரில் குற்ற தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் விக்னேஷ்வரன் தலைமையில் போலீஸார் குண்டு வீசியவர்களைத் தேடி வந்தனர். இந்நிலையில் பெட்ரோல் குண்டு வீசிய எஸ்.வாகைகுளத்தை சேர்ந்த ஆசைபாண்டி மகன் கதிர்வேல்சாமி (25) மற்றும் கருப்பணன் மகன் குட்டி என்ற சரவணகுமார் (27) ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய 2 பேரை போலீஸார் தேடிவருகின்றனர்.