முதுகுளத்தூரில் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் சார்பில் குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாப்பது குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
பேரணி காந்திசிலையில் தொடங்கி, தேரிருவேலி முக்கு ரோடு, பேருந்து நிலையம் வரை நடைபெற்றது. பேரணிக்கு ஒன்றியக் குழுத்தலைவர் ஐ.சுதந்திரகாந்தி இருளாண்டி தலைமை வகித்தார். ஆணையாளர் குருநாதன், பள்ளித் தலைமை ஆசிரியர் ஓ.ஏ.முகம்மது சுலைமான், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட அலுவலர் அருள்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியில் கவுன்சிலர்கள் எம்.சிவக்குமார்,சரஸ்வதி செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் அவார்டு டிரஸ்ட் மேலாளர் சின்னமருது ரெக்கிலின் நன்றி கூறினார்.