முதுகுளத்தூரில் தமுமுக நிர்வாகிகள் தேர்வு
முதுகுளத்தூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யும் கூட்டம் வெள்ளிக்கிழமை அதன் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு மாநில தேர்தல் ஆணையர் மாயவரம் அமீன் தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்புக் குழு நிர்வாகிகள் பாஹிர் அலி, செய்யது, வாவா ராவுத்தர், முகம்மது அலி பூட்டோ, சல்மான் ரபீக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் பேரூர் கழக செயலராக ஏ. ஜபருல்லாகான், பொருளாளராக எம். முகம்மது ஜியாவுதீன், துணைச் செயலராக முகம்மது இக்பால், அப்துல் அஜீஸ், அம்ஜத் அலிகான், தொண்டர் அணி செயலராக முகம்மது அலி, மாணவரணி செயலராக செய்யது மீரா, வர்த்தக அணி செயலராக அப்துல்ரகுமான், தொழிலாளர் அணி செயலராக சிக்கந்தர், மருத்துவ அணி செயலராக முகம்மது தமிமுல் அன்சாரி, சுற்றுச்சூழல் அணி செயலராக முகைதீன் அப்துல்காதர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். முடிவில் முகம்மது இக்பால் நன்றி கூறினார்.