முதுகுளத்தூரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுகம்
முதுகுளத்தூரில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
வேட்பாளர் சே.ப.முகம்மது கதாபியை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் நடிகருமான சீமான் அறிமுகம் செய்தார். கூட்டத்தில் சீமான் பேசுகையில், தமிழர்களை தமிழர்கள் மட்டுமே ஆள வேண்டும். திமுகவும், அதிமுகவும் சாராயக்கடைகளை திறந்து வைத்து தமிழர்களை குடிக்காரர்களாக ஆக்கி விட்டது. முதுகுளத்தூர் தொகுதிக்கு இது வரை ஆட்சி செய்தவர்கள் எந்த நன்மையும் செய்யவில்லை. மாறாக மணலைத் திருடி விற்பனை செய்து நீரின் வளத்தை குறைத்து ஏழை விவசாயிகளின் வாழ்க்கையை சீரழித்து விட்டனர் என பேசினார். கூட்டத்தில் மாவட்ட செயாளர் சிவக்குமார், ஒன்றிய செயலாளர்கள் இளந்தமிழன், கண்ணன்,பாசறை செயலர் புதியவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.