முதுகுளத்தூரில் சாலையோரக் கடைகள் அகற்றம்

Vinkmag ad

முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த சாலையோரக் கடைகள் சனிக்கிழமை அகற்றப்பட்டன.

முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகே அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுவதாலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாலும் சார் ஆட்சியர் சமீரன் உத்தரவின் பேரின் வட்டாட்சியர் ராமமூர்த்தி தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர் ஆர்.இளவரசி, சார்பு ஆய்வாளர் மூக்கன் ஆகியோர் முன்னிலையில் அந்த பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் சனிக்கிழமை அகற்றப்பட்டன.

இதில் பேருந்து நிலையம் அருகே சாலையோரங்களில் இருந்த பழக்கடை, காய்கறிக் கடை, பூக்கடைகள் அகற்றப்பட்டன. மேலும் கடைகளின் மேற்கூரைகள், சிமெண்ட் தளங்கள், பேனர்கள் போன்றவற்றையும் அதிகாரிகள் அகற்றினர்.

News

Read Previous

வழக்கறிஞர் சமத் தாயார் வஃபாத்து

Read Next

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நிலக்கடலை…

Leave a Reply

Your email address will not be published.