முதுகுளத்தூரில் காந்தி ஜயந்தி விழா
முதுகுளத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு அமைந்துள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து காந்தி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அன்பு தொண்டு நிறுவனம் சார்பில் காந்தியின் உருவ படத்துக்கு தீபம் ஏற்றி மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது.
விழாவில் அன்பு தொண்டு நிறுவன மேலாளர் கோ. உமையலிங்கம், அரசு மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் துரைப்பாண்டி, செயலர் சதீஸ், பொருளாளர் மகேந்திர பூபதி, துணைச் செயலர் மணிகண்டன் ஆகியோர் காந்தியின் உருவ படத்துக்கு தீபம் ஏற்றினர்.
பின்பு காந்தியின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் குணசேகரன், ராஜேஸ், நீதிதேவன் ஆகியோர் செய்திருந்தனர். விழா முடிவில் பிரபாகரன் நன்றி கூறினார்.