முதுகுளத்தூரில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா
முதுகுளத்தூரில் அதிமுகவினர் எம்.ஜி.ஆரின் 97 வது பிறந்த நாள் விழாவை இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் எம்.ஜி.ஆர்.சிலை, பேருந்து நிலையம், காந்திசிலை, அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் எம்.ஜி.ஆரின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து,இனிப்பு வழங்கி கொண்டாடினர். விழாவுக்கு சட்டப் பேரவை உறுப்பினர் எம்.முருகன் தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் எம்.சுந்தரபாண்டியன் முன்னிலை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் கர்ணன்,க வுன்சிலர்கள் மலைக்கண்ணன்,செந்தில்குமார், முன்னாள் ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம் மற்றும் அதிமுக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கடலாடி: அதிமுகவினர் எம்.ஜி.ஆரின் 97 வது பிறந்த நாள் விழாவை எம்.ஜி.ஆர்.சிலை, பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர். விழாவுக்கு சட்டபேரவை உறுப்பினர் எம்.முருகன் தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் எம்.சுந்தரபாண்டியன் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் முனியசாமி பாண்டியன், நகர்செயலாளர் பாலசந்தர், ஒன்றிய அவைத்தலைவர் வேலுச்சாமி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் ஜெயச்சந்திரன் மற்றும் அதிமுக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.