உடைகுளத்தில் “அம்மா’ திட்ட முகாம்
முதுகுளத்தூர் தாலுகா மகிண்டி ஊராட்சி ஒன்றியம் உடைகுளத்தில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள உடைகுளத்தில் நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் குடும்ப அட்டை வழங்குதல்,பட்டாமாறுதல், வருமானம் மற்றும் இருப்பிட சான்றிதழ், வீட்டுமனை பட்டா வழங்குதல்,முதியோர் உதவித்தொகை என 36 மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டன.
முகாமுக்கு தாசில்தார் எஸ்.மோகன் தலைமை தாங்கினார், முதுகுளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.முருகன்,ஒன்றிய தலைவர் சுதந்திராகாந்தி இருளாண்டி,ஒன்றியத் தலைவர் தர்மர், கவுன்சிலர் பிரேமா கிருஷ்ணமூர்த்தி,சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் லீலாவதி, மண்டல துணை வட்டாட்சியர் மரகதமேரி, வட்ட வழங்கல் அலுவலர் கிருஷ்ணசாமி, வருவாய் அலுவலர் பிரேமா,கிராம நிர்வாக அலுவலர் தினேஸ்பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர்.முடிவில் ஊராட்சித்தலைவர் கிருஷ்ணவேணி மலைமேகம் நன்றி கூறினார்.