மாநில போட்டிக்கு முதுகுளத்தூர் மாணவர் தகுதி
முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி மாணவர் கம்பு ஊன்றி தாண்டுதல் போட்டியில் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்ட பள்ளி மாணவர்களுக்கிடையேயான போட்டிகள் கடந்த 25, 26 ஆகிய தேதிகிள் சிவகங்கை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் நடைபெற்றன. இதில் 17 வயதிற்குள்பட்டோர் பிரிவில் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் வி.அஜித் கம்பு ஊன்றி தாண்டுதல் போட்டியில் முதலிடம் பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றார். அம்மாணவர் உயரம் தாண்டுதல் போட்டியில் இரண்டாமிடமும் பெற்றார். அதே பள்ளியைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் எம்.சந்துரு 19 வயது பிரிவில் கம்பு ஊன்றி தாண்டுதலில் மூன்றாமிடம் பெற்றார்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை தலைமை ஆசிரியர் ஓ.ஏ.முகம்மது சுலைமான், தாளாளர் எம்.எம்.கே. எம்.காதர்முகைதீன், கல்விக் குழுத் தலைவர் எம்.காதர்முகைதீன், ஜமாத் தலைவர் எம்.எஸ். நயினாமுகம்மது, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் டாக்டர் எஸ்.பிரசாத், உடற்கல்வி ஆசிரியர்கள் கே. கமால்பாட்சா, ஜே.முகம்மதுஉசேன், எம்.தமிமுல்அன்சாரி மற்றும் கல்விக்குழு உறுப்பினர்கள், ஜமாத்தார்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.