மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கல்

Vinkmag ad

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியிலும், அரசு மேல் நிலைப்பள்ளியிலும் 379 மாணவ,மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் 247 மாணவ,மாணவிகளுக்கு சைக்கிள்களை ஒன்றியக்குழு தலைவர் ஐ.சுதந்திராகாந்தி இருளாண்டி வழங்கினார். நிகழ்ச்சியில் ஜமாத் தலைவர் ஏ.காதர்முகைதீன், கல்விக்குழுத்தலைவர் ஏ.ஷாஜஹான், மேல்நிலைப் பள்ளி தாளாளர் எஸ்.சௌக்கத்அலி, தொடக்கப்பள்ளி தாளாளர் ஏ.சேட் ஜாஹிர்உசேன், நர்சரி பள்ளி தாளாளர் எஸ்.முகம்மது இக்பால், தாசில்தார் ரவீந்திரநாதன், பேரூராட்சி தலைவர் சசிவர்ணம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஓ.ஏ.முகம்மது சுலைமான் அனைவரையும் வரவேற்று பேசினார். உதவித் தலைமை ஆசிரியர் அலாவுதீன் நன்றி கூறினார்.

அரசு மேல்நிலைப்பள்ளியில் 132 மாணவ,மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டனநிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் (பொ) எம்.ராஜேந்திரன் தலைமை வகித்தார். அண்ணா தொழிற்சங்க செயலர் சேதுபதி, கவுன்சிலர் உடை எம்.சிவக்குமார், இளம்பெண்கள் பாசறை ஒன்றிய செயலர் மாரி, என்.சி.சி.திட்ட ஒருங்கிணைப்பாளர் துரைப்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் கே.சந்தனவேலு வரவேற்புரை நிகழ்த்தினார்.

நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் என்.மங்களநாதன் நன்றி தெரிவித்தார்.

News

Read Previous

அறிவுரையின் நூற்றாண்டு

Read Next

துபையில் பணிபுரியும் ரஸீனுக்கு ஆண் குழந்தை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *